Wednesday, May 25, 2011

இன்பக் குளத்தில் இரவல் மீன்கள்

இழந்ததெதனை இருக்கப்பெற்றேன் ?
கடந்ததெதனை மறக்கப்பெற்றேன் ?
மறைந்ததெதனை நினைக்கப்பெற்றேன் ?
மறுத்ததெதனை கிடைக்கப்பெற்றேன் ?

இழந்ததும் கடந்ததும்
மறைந்ததும் மறுத்ததும்
உறவாமல் போகையில்
இறவாமல் தொடர்கையில் - மன
இன்பக் குளத்தில் இரவல் மீன்கள்
துள்ளிக் குதித்தலுமுண்டோ ? - அவை
உள்ளக்களிப்பினை சுண்டி இழுத்திட - அதில்
தூண்டிர் புழுக்களுமுண்டோ ?

1 comment: