Saturday, July 17, 2010

பிரிவு ( Pirivu )

                    
உன்னோடு நானிருந்த நாட்கள்
     விண்ணோடு நான் பறந்த நாட்கள் !
இன்னொடு இசைப் புனைந்த பாக்கள்
     தன்னோடு உனைவரைந்த தாட்கள் !
கருவிழி கரைகிற போதும்
     கசடாய் கசிந்திடும் காதல் !

                
இருவிழி இசைந்திட கேட்கின் 
     எளிதாய் கிடைத்திடும் சாதல் !
மண்ணை உடல் கலக்கும் போதும் 
     என்னை உடல் விடுத்துச் செல்லும் !
நின்னது என்னுயிர் என்று
     நின்னுயிர் எடுத்துச் சொல்லும் !


3 comments: