அத்தையவள் உரைக்கக் கேட்டேன்.
மத்தை தயிரில் கடைந்தது போல்
சித்தம் முழுதும் கலைந்ததடி - உடல்
இரத்தம் கணத்தில் உறைந்ததடி
இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல்
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
கொத்து மலர்களை அடைந்த வண்டாய் - உல
கத்தை மறந்து லயித்த மனம் - மடிய
நைத்ததடி உன் மணநாள் செய்தி...
வைத்த விழி கலையாமல் உன்னழகை
ருசித்த தளிரிதயம் - இன்று குற்றூசி
தைத்த கொடுவலி யுணர்ந்ததடி
வித்தகியென்றே உனை வியந்துரைப்பேன் செல்லமாய்-இன்று
வித்தாகி விட்டாயோ நம்மின்னுறவை மற்றோனுக்கு ?
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும்
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின்
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?
உணர்ச்சி பொங்க வரிகள் எங்கும் காதல் உணர்வையும் பிரிவையும்
ReplyDeleteதொடுத்துள்ளீர் அருமையான வரிகள் நண்பரே
இது தங்கள் உண்மை கதையோ
http://marumlogam.blogspot.com
அருமை... கடைசி 5 அல்லது 6 வரிகள் மிக மிக அருமை இதயத்தை தொட்டு விட்டது ..
ReplyDeleteதத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ReplyDeleteஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
எந்த வரிகளை பார்த்த பெண் கண்டிப்பாக மாம் ஏற்க மாட்டாள்....
(இன்னும் நிறைய கேளுங்க..)
A beautiful thought of your mother
ReplyDeleteYes my brother, your affection to your mom is seen from your words.
Nalina