Sunday, August 15, 2010

காதல் கவி ( Poet for Love )

காதல் கவி எழுதிட கரமிரண்டும் துடிக்குதடி 
மனம் ஏனோ மறுக்கிறது 
கசங்கும் காகிதத்திலா கண்மணியின் கவியென்று...
உயிரில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன் 
மனம் ஏனோ மறுக்கிறது
பிரியும் உயிரிலா பிரியமானவளின் கவியென்று...
உடலில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன்
மனம் ஏனோ மறுக்கிறது
எரியும் உடலிலா என்னவளின் கவியென்று...
கண்ணில் எழுதிடவோ ? 
கண்ணீர் வந்தழித்திடுமே !
விண்ணில் எழுதிடவோ ?
மேகம் வந்து மறைத்திடுமே !
மண்ணில் எழுதிடவோ ?
மகத்துவம்தான் குறைந்திடுமே !
எழுதுகோல் உயிர் நீத்ததடி 
என்னிலை காணச் சகியாமல்...

4 comments:

  1. ivalavu type panna neram iruku, ana eludha neram illaya? appa andha pullaiye kalati vitru.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான வரிகள் நண்பரே
    நாம் நிபதேன்னவோ அவ்வன்னமே ஆனால் அவர் நினைப்பது யார்ரறிவோம்

    http://marumlogam.blogspot.com

    ReplyDelete
  3. பாஸ் என்கிற சுபாஷ்September 6, 2010 at 7:32 AM

    very nice one

    ReplyDelete
  4. Very nice , I feel Past while read it...

    ReplyDelete