காதல் கவி எழுதிட கரமிரண்டும் துடிக்குதடி
மனம் ஏனோ மறுக்கிறது
கசங்கும் காகிதத்திலா கண்மணியின் கவியென்று...
உயிரில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன்
மனம் ஏனோ மறுக்கிறது
பிரியும் உயிரிலா பிரியமானவளின் கவியென்று...
உடலில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன்
மனம் ஏனோ மறுக்கிறது
எரியும் உடலிலா என்னவளின் கவியென்று...
கண்ணில் எழுதிடவோ ?
கண்ணீர் வந்தழித்திடுமே !
விண்ணில் எழுதிடவோ ?
மேகம் வந்து மறைத்திடுமே !
மண்ணில் எழுதிடவோ ?
மகத்துவம்தான் குறைந்திடுமே !
எழுதுகோல் உயிர் நீத்ததடி
என்னிலை காணச் சகியாமல்...
ivalavu type panna neram iruku, ana eludha neram illaya? appa andha pullaiye kalati vitru.
ReplyDeleteமிகவும் அருமையான வரிகள் நண்பரே
ReplyDeleteநாம் நிபதேன்னவோ அவ்வன்னமே ஆனால் அவர் நினைப்பது யார்ரறிவோம்
http://marumlogam.blogspot.com
very nice one
ReplyDeleteVery nice , I feel Past while read it...
ReplyDelete